Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (09:32 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி(நாளை) தொடங்கவுள்ளது.

இந்தமுதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அவருக்குக் குழந்தை பிறந்துள்ளதால் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று பலவீனமாகவே உள்ளது.

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் பேட் கம்மின்ஸ் “சொந்த மண்ணில் விளையாடுவதால் எப்போதுமே அழுத்தம் இருக்கும். இந்திய அணியும் வலுவாக உள்ளது என்பதால் கடுமையான போட்டி நிலவும். தொடரை வெல்ல இதுவே சரியான தருணமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அப்பா பந்துவீச, மகன் சிக்ஸர் அடிக்க… ஆஹா அற்புத தருணம்…!

கடைசி போட்டியில் விளையாடும் ரஸ்ஸல்… வீரர்கள் கொடுத்த ‘Guard of Honor’ கௌரவம்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments