பரமிஸ்ரன், தவான் அதிரடியால் உயர்ந்த ஸ்கோர் ! இலக்கை எட்டுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (21:45 IST)
ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய  போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோதி வருகிறது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்  தேர்வு செய்தது.

எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  ஆட்டம் தொடங்கிய நிலையில்,  பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  பரமிஸ்ரன் சிங் 60( 34பந்துகள்) ரன்கள், ஷிகர் தவான் 86 (56 பந்துகள்) ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாயினர்.

அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஆயினும், ஜிட்டேஷ் சர்மா 27 ரன்கள் சேர்த்தார். எனவே 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி,4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில், ஹோல்டர் 2 விக்கெட்டும்,சாஹல் மற்றும் அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments