Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலர்களால் தப்பித்த பாகிஸ்தான்… நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (06:42 IST)
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

கேப்டன் பாபர் ஆசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த ரிஸ்வான் மற்றும் சவுத் சக்கீல் ஆகியோர் நிலைத்து நின்று அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர்வந்த வீரர்களும் கணிசமான ரன்களை சேர்க்க, பாகிஸ்தான் அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் சேர்த்தது. ஒரு கத்துக்குட்டி அணியிடம் அனைத்து விக்கெட்களையும் பாகிஸ்தான் அணி இழந்திருப்பது விமர்சனங்கள் ஏற்பட வழிவகை செய்துள்ளது.

அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments