Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பாகிஸ்தானோடு பலப்பரீட்சை… டாஸ் வென்ற பங்களாதேஷ் எடுத்த முடிவு!

இன்று பாகிஸ்தானோடு பலப்பரீட்சை… டாஸ் வென்ற பங்களாதேஷ் எடுத்த முடிவு!
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:49 IST)
உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி தோற்றது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானின் மிக மோசமான தொடராக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளில் எந்த அணி தோற்றாலும், அது அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பெங்காலி சம்பவம்'.....ஷாக்கான வீரர்கள்....தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்