Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:54 IST)
பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்ப்புக்கேற்ப விளையாடவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நான்கில் தோற்று, இரண்டில் மட்டுமெ வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் அணியினர் மீது கடுமையான விமர்சனங்களுக்கு  ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லதீப் வீரர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் "வீரர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை... வாரியத் தலைவர் கேப்டனுக்கு பதிலளிக்கவில்லை, இந்த சூழ்நிலையில் நாங்கள் அணியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்" என்று ரஷித் லத்தீப் PTV ஸ்போர்ட்ஸ் சேனலில் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான சமீபத்திய ஒப்பந்தம் பரிசீலனையில் இருப்பதாக சில வீரர்கள் கூறியதாக அவர் மேலும் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments