Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பாகிஸ்தான்!

vinoth
சனி, 15 ஜூன் 2024 (07:07 IST)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் நாசாவ் மைதானத்தில் 8 போட்டிகள் வரை நடத்தப்பட்டன. ஆனால் இந்த மைதானத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்களே சேர்க்க முடியாத இக்கட்டுக்கு ஆளாகினர்.

இதனால் சில போட்டிகளின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மாறாக அதிர்ச்சிகரமாக அமைந்தன. அப்படி ஒரு போட்டிதான் பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8க்கு செல்வது சிக்கலானது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை முழுவதுமாக இழந்துள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகளிலேயே வெளியேறியது போல டி 20 உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments