உலகக் கோப்பை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற போவதில்லையா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (07:01 IST)
நாளை முதல் 15 ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் 10 நகரங்களில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இன்றிரவு பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அந்த நிகழ்வு நடக்காது என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஆஷா போஸ்லே, ரன்வீர் சிங், தமன்னா பாட்டியா, ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் அரிஜித் சிங் போன்ற நட்சத்திரங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, பிசிசிஐ , அனைத்து கேப்டன்களை மட்டும் லேசர் ஷோ ஒன்றை நடத்தி உலகக் கோப்பையை தொடங்கி வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு விழா அல்லது அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலுக்கு முன் ஒரு பெரிய விழாவை பிசிசிஐ நடத்தும் எனவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8.. தெ.ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த இந்தியா..!

40 வயதில் 2வது திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவான்.. மணமகள் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதியில் மோதினால் அந்த போட்டி எங்கு நடக்கும்? பெரும் குழப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments