Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ற அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ

Advertiesment
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ற அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ
, செவ்வாய், 11 ஜூலை 2017 (18:53 IST)
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் என்ற அறிவிப்புக்கு பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுதரி மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு நடைப்பெற்றது. ரவி சாஸ்திரி அல்லது சேவாக் இரண்டில் யாராவது ஒருவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது என்று எண்ணப்பட்ட நிலையில் தேர்வு குழுவில் ஒருவரான கங்குலி, கேப்டன் கோலியுடன் கலந்து ஆலோசித்து பயிற்சியாளரை அறிவிப்போம் என்றார். 
 
தற்போது சில மணி நேரங்களுக்கு முன் திடீரென இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த செயலாளர் அமிதாப் சவுதரி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
தற்பொது வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிரிக்கெட் ஆலோசனை குழு இன்னும் பயிற்சியாளர் யார் என்பது குறித்த முடிவுக்கு வரவில்லை. பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது என்பது குறித்த செய்திகள் வெளியானதில் உண்மை இல்லை. கிரிக்கெட் ஆலோசனை குழு அடுத்த திங்கட்கிழமை வரை பயிற்சியாளர் யார் என்று தேர்வு செய்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவி சாஸ்திரி!!