Publish Date: Tue, 10 Jun 2025 (09:45 IST)
Updated Date: Tue, 10 Jun 2025 (10:05 IST)
உலகமெங்கும் தற்போது பிரான்ச்சைஸ் கிரிக்கெட் போட்டிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. அதில் அதிகளவு டி 20 போட்டிகளாகவே உள்ளன. அதன் உச்சமாக இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் உள்ளன. இதில் விளையாட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பிரான்ச்சைஸ் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் ஒரு மாதத்தில் சர்வதேசப் போட்டிகளில் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் வருவாயை ஈட்டி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் குயிண்ட்டன் டிகாக், ஹென்ரிச் கிளாசன், சுனில் நரேன் என பல திறமையான வீரர்கள் ஓய்வை அறிவித்து விட்டு லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றனர். அந்த வகையில் தற்போது நிக்கோலஸ் பூரன் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.