Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி… முதல்முறையாகக் கோப்பையை வெல்லப் போவது யார்?

இன்று மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி… முதல்முறையாகக் கோப்பையை வெல்லப் போவது யார்?

vinoth

, ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:14 IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டத்தில் இருக்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடக்கவுள்ளது.  இந்த போட்டியில் நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இதில் யார் வெற்றி பெற்றாலும் முதல் முறை கோப்பையை வெல்லும் அணியாவார்கள். இதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RCBக்கு விளையாட சொல்லி கோரிக்கை வைத்த ரசிகர்.. ரோஹித் ஷர்மாவின் ரியாக்‌ஷன்!