Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (07:29 IST)
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் போட்டியாக ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 345 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சதமடித்து அசத்தினார். கேப்டன் பாபர் அசாம் 80 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 346 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய நியுசிலாந்து அணி 44 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் மற்றும் மார்க் சேப்மான் ஆகியோர் அதிரடியாக அரைசதம் அடித்து இலக்கை எட்ட உதவினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments