Publish Date: Tue, 14 Sep 2021 (10:19 IST)
Updated Date: Tue, 14 Sep 2021 (10:52 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இசான் மணி செயல்பட்டு வருகிறார். நாளையோடு அவரின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் அவருக்கு பதில் யார் தலைவர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இசான் மணியும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராசாவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் ரமீஸ் ராஜா அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகாலம் அந்த பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் பதவியேற்ற உடனேயே அணிக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளார். பேட்டிங்குக்கு ஆஸி அணியின் மேத்யு ஹெய்டனும், பந்துவீச்சுக்கு தென்னாப்பிரிக்காவின் வெர்னன் பிளாண்டரும் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளார்.