Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவாக் விக்கெட்டை எடுப்பது எளிதானது… பாகிஸ்தான் முன்னாள் பவுலர் கருத்து!

சேவாக் விக்கெட்டை எடுப்பது எளிதானது… பாகிஸ்தான் முன்னாள் பவுலர் கருத்து!
, செவ்வாய், 18 ஜூலை 2023 (08:08 IST)
பாகிஸ்தான் அணிக்காக சில ஆண்டுகள் விளையாடியவர் ரானா நவீன் உல் ஹசன். இவர் இப்போது இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் குறித்து கூறியுள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. சேவாக்  விக்கெட்டை வீழ்த்துவது மிக எளிதானது என்றும் ஆனால் டிராவிட் விக்கெட்டை வீழ்த்துவது கடினம் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசியுள்ளதில் “ஒரு சம்பவத்தை சொல்கிறேன். சேவாக்  85 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஒரு மேட்ச் இருந்தது. நான் 2004-05 தொடரை வென்றதைப் பற்றி பேசுகிறேன். நான் அந்த போட்டியின் வீரராக இருந்தேன். தொடர் 2-0 என நாங்கள் பின்தங்கி இருந்தோம்.

தொடரின் மூன்றாவது போட்டியில் சேவாக் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார். அவர்கள் கிட்டத்தட்ட 300 ரன்களை எடுத்தார்கள், சேவாக் 85 ரன்களை நெருங்கிவிட்டார். நான் இன்ஸி பாயிடம் பந்தைக் கொடுக்கச் சொன்னேன். நான் மெதுவாக பவுன்சரை வீசினேன். அப்போது நான் அவரிடம் சென்று, 'உங்களுக்கு விளையாடத் தெரியாது. நீங்கள் பாகிஸ்தானில் இருந்திருந்தால், சர்வதேச அணியில் இடம்பிடித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

அதில் கோபப்பட்ட அவர்ர் என்னிடம் சில விஷயங்களைச் சொன்னார். திரும்பி வரும் வழியில் இன்சி பாயிடம் ‘அடுத்த பந்தில் அவர் வெளியேறுகிறார்’ என்று கூறினேன். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் ஒரு மெதுவான பந்தை வீசினேன், கோபமடைந்த சேவாக் அதை பெரிதாக அடிக்க முயன்றார், ஆனால் அவுட்டானார். அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு சேவாக் விக்கெட் முக்கியமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேஜர் லீக் கிரிக்கெட்: லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 50 ரன்களில் ஆல்-அவுட்.. நியூயார்க் அபாரம்..!