Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலியின் காலம் முடிந்துவிட்டது… கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மாவிடம் கொடுங்கள் – மீண்டும் குட்டையை குழப்பும் முன்னாள் வீரர்!

கோலியின் காலம் முடிந்துவிட்டது… கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மாவிடம் கொடுங்கள் – மீண்டும் குட்டையை குழப்பும் முன்னாள் வீரர்!
, திங்கள், 16 நவம்பர் 2020 (17:06 IST)
கோலி லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து காலம் தொடங்கிவிட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக நடந்த முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணி டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோலியை விட ரோஹித்தே சிறந்த கேப்டன் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இன்னமும் ரோஹித் சர்மாவை நியமிக்காதது வெட்கக்கேடு. அப்படி அவருக்கு அளிக்கவில்லை என்றால் அது இந்திய அணிக்குதான் துரதிர்ஷ்டம். ஒருவரை கேப்டனாக நியமிக்க அளவுகோல்கள் என்ன என்று தெரியவில்லை? ரோஹித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதனால் விராட் கோலியை ஒரு வடிவத்துக்கும் ரோஹித்தை ஒரு வடிவத்துக்கும் கேப்டனாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவிக்க ஆகாஷ் சோப்ரா மற்றும் கபில்தேவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ‘எந்த கேப்டனும் செய்யாத சாதனையை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா செய்துள்ளார். இந்திய அணியிலும் கோலி இல்லாத போது அவர் தலைமை தாங்கும் போட்டிகளில் சிறப்பான சாதனைகளைக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முன்னாள் வீரர்கள் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்கும் நேரம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரே பாய்.. பர்த்டேவுக்கு இப்படியா வாழ்த்து சொல்றது! – வைரலாகும் சன் ரைஸர்ஸ் ட்வீட்!