Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (07:44 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி கடைசி வரை பரபரப்பான ஒன்றாக சென்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் டேவிட் மில்லர் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோரின் அதிரடியால் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டியது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடி இலக்கை நெருக்கமாக கொண்டு சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் ஹர்திக் பாண்ட்யா இருந்தும் மும்பை அணியால் வெல்ல முடியவில்லை. இதன் மூலம் 191 ரன்கள் மட்டுமே சேர்த்து மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments