Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“அந்த முடிவை ஏன் எடுத்தார்கள்…” முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து!

“அந்த முடிவை ஏன் எடுத்தார்கள்…” முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து!
, ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:59 IST)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் டி 20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 தொடருக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

இந்நிலையில் இந்த முடிவை அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். அதில் “ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. முதலில் சில போட்டிகளில் ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக இறக்கினார்கள். இதுபோன்ற புதுமுயற்சிகள் எடுத்தால் அந்த வீரருக்கு 5 போட்டிகளாவது வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: மழை காரணமாக தாமதம்!