Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை… ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்… பிரியாவிடை கொடுக்கும் ரசிகர்கள்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய வழிநடத்தினார். பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவர் தற்போது அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.1999 ஆம் ஆண்டில் இருந்து 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவருக்கு தற்போது வயது 39.

இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 50 ரன்கள் சராசரியில் 7805 ரன்கள் சேர்த்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளிலும், 89 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவரின் பயோபிக் படமான சபாஷ் மிது என்ற பெயரில் டாப்ஸி நடிப்பில் உருவாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments