23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை… ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்… பிரியாவிடை கொடுக்கும் ரசிகர்கள்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய வழிநடத்தினார். பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவர் தற்போது அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.1999 ஆம் ஆண்டில் இருந்து 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவருக்கு தற்போது வயது 39.

இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 50 ரன்கள் சராசரியில் 7805 ரன்கள் சேர்த்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளிலும், 89 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவரின் பயோபிக் படமான சபாஷ் மிது என்ற பெயரில் டாப்ஸி நடிப்பில் உருவாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோல்வி மட்டுமல்ல, மோசமான சாதனையை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. டெல்லி அபார வெற்றி..!

ஐபிஎல் இனி வேண்டாம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்..!

35 நாட்களில் பரிசுக்கு மட்டுமே 17.7 கோடி செலவு செய்த ஹர்திக் பாண்டியா!...

வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments