Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6.5 கோடிக்கு வாங்கிய வீரருக்கு காயம்… டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:07 IST)
டெல்லி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிட்செல் மார்ஷ் காயமடைந்துள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானில் உள்ளார். ஆனால் அங்கு பயிற்சியின் போது போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரை முடித்துவிட்டு அவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக கலந்துகொள்ள இருந்தார். இப்போது அந்த தொடரிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் மிட்செல் மார்ஷை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments