Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகள்தான் மோதும்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் நம்பிக்கை!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகள்தான் மோதும்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் நம்பிக்கை!
, வெள்ளி, 16 ஜூன் 2023 (10:53 IST)
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான வரைவு அட்டவணையை பிசிசிஐ ஐசிசி வசம் கொடுத்துள்ளது. ஐசிசி அதை மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. விரைவில் அட்டவணை உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த கருத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முன்னதாக இதே கருத்தை பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் விளையாடினாலே பரபர்ப்புக்கு பஞ்சம் இருக்காது. இறுதிப் போட்டியில் விளையாடினால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே வியக்க ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் வங்கதேசம்..!