Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா உல் ஹக்

Advertiesment
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா உல் ஹக்
, வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:50 IST)
பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். இவர்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ஓய்வு குறித்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்.ஆனால் அது நடக்கவில்லை. முழுக்க முழுக்க இது எனது தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மேலும் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10வது ஐபிஎல் தொடர்: இன்று மும்பை அணியுடன் புனே அணி மோதல்