Webdunia - Bharat's app for daily news and videos

Install App

146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் Times Out ஆன முதல் வீரர் மேத்யூஸ்.

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (18:22 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலையில் இன்றைய போட்டி சுவாரஸ்யம் இல்லாத ஒரு போட்டியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இலங்கை அணி 49.3 ஓவரில் 279 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Times Outஆன முதல் வீரர் மேத்யூஸ்.

தவறான ஹெல்மெட் எடுத்து வந்ததால் சரியான ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு இன்னொரு வீரர் வர 2 நிமிடத்திற்கு மேல் ஆனது. எனவே வங்கதேச வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்ய அவரும் அவுட் கொடுத்தர்.

நடுவரிடம் வாக்குவாதம் செய்த போதும் அவர் பின் வாங்கவில்லை. ஒருவர் அவுட் ஆனால் அடுத்த 120  நொடிகளுக்குள் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும் என்பது ஐசிசி விதி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments