Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலிங்காவுக்கு ஓராண்டு தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை!

மலிங்காவுக்கு ஓராண்டு தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை!

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (12:34 IST)
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகராவை குரங்கு என விமர்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதித்துள்ளது.


 
 
நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகரா, இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்களின் உடல் தகுதி பிரச்சனை காரணமா என விசாரணை நடத்தப்படும் என்றார். மேலும் வீரர்களுக்கு கொழுப்பு அதிகமாகி குண்டாகிவிட்டனர் எனவும் விமர்சித்தார்.
 
இதனையடுத்து இலங்கை அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என அமைச்சரை மறைமுகமாக குரங்கு என திட்டினார்.
 
லசித் மலிங்காவின் இந்த பேச்சு சர்ச்சையானதை அடுத்து அவர் மீது இலங்கை கிரிக்கெட் அணி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மலிங்காவுக்கு ஓராண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மலிங்க தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டும் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments