ஒரே ஸ்பெல்லில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்த குல்தீப் யாதவ்!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:10 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. இந்திய பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அதிரடி சதம் அடித்தனர். கோலி 122 ரன்களும், கே எல் ராகுல் 111 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே சேர்த்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கும் விதமாக அமைந்தது சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு.

8 ஓவர்கள் வீசிய அவர் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் அணியின் பினவரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரையும் அவர் காலி செய்ய இந்திய அணியின் வெற்றி எளிதானது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments