கம்பீர் & கோலி இருவருக்கும் 100 சதவீத அபராதம்!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (09:41 IST)
கோலியும், கம்பீரும் 2014 ஆம் ஆண்டு இதே போல ஐபிஎல் தொடரில் மோதிக் கொண்ட சம்பவம் ஐபிஎல் வரலாற்றின் கருப்புப் புள்ளிகளில் ஒன்றாக இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் நேற்று லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுற்றியிருந்த வீரர்கள் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினர்.

லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக போட்டி சம்பளம் முழுவதும் அபராதமாக பிசிசிஐ –ஆல் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் கோலி மெதுவான பந்துவீச்சுக்காக அபராதம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments