Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை உட்கார வைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிய ரோஹித் ஷர்மா!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (08:03 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அதிருப்தியளிக்கும் வகையில் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 23 ஓவர்கள் மட்டுமே விளையாடி 114 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் மற்றும் ரவீந்தர ஜடேஜா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையைக் கலைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார் ரோஹித் ஷர்மா.

தான் ஓப்பனிங் இறங்காமல் இஷான் கிஷானோடு ஷுப்மன் கில்லை இறக்கிய அவர், அடுத்தடுத்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்தர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என வீரர்களைக் களமிறக்கினார். அதன் பின்னர் ஏழாவது பேட்ஸ்மேனாக தான் இறங்கி ஆட்டத்தை முடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி வீரர் கோலி களமிறக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments