Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்ஸலைக் கூட கழட்டிவிடுகிறதா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்… அப்ப தக்கவைக்கும் வீரர்கள் யார்?

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (08:36 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணி. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது.

அதனால் தற்போது மெஹா ஏலத்துக்கான வீரர்களைத் தக்கவைப்பதில் கே கே ஆர் அணி ஸ்ரேயாஸை முதல் வீரராக தக்கவைக்கத் தயங்குகிறதாம். ரஸ்ஸல் மற்றும் சுனில் நரேனை முதல் மற்றும் நான்காம் வீரர்களாக 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்க விரும்புவதாகவும், ஸ்ரேயாஸை மூன்றாவது வீரராக 11 கோடி ரூபாய்க்கு தக்கவைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அவரிடம் இருந்து கேப்டன்சியை மாற்றவும் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி கே கே ஆர் அணி ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஸ்டார்க் ஆகியோரையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த அணியில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஹர்ஷித் ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments