ரஸ்ஸலைக் கூட கழட்டிவிடுகிறதா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்… அப்ப தக்கவைக்கும் வீரர்கள் யார்?

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (08:36 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணி. ஆனாலும் அவர் அணிக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை என்பது பலரும் அறிந்தது.

அதனால் தற்போது மெஹா ஏலத்துக்கான வீரர்களைத் தக்கவைப்பதில் கே கே ஆர் அணி ஸ்ரேயாஸை முதல் வீரராக தக்கவைக்கத் தயங்குகிறதாம். ரஸ்ஸல் மற்றும் சுனில் நரேனை முதல் மற்றும் நான்காம் வீரர்களாக 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்க விரும்புவதாகவும், ஸ்ரேயாஸை மூன்றாவது வீரராக 11 கோடி ரூபாய்க்கு தக்கவைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அவரிடம் இருந்து கேப்டன்சியை மாற்றவும் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி கே கே ஆர் அணி ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஸ்டார்க் ஆகியோரையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த அணியில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஹர்ஷித் ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மறுப்பு: ஆஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்..!

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments