Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

vinoth

, வெள்ளி, 24 மே 2024 (07:59 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனில்  நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் போராடி வருகிறது ஆர் சி பி. அந்த அணிக்காக இல்லாவிட்டாலும் விராட் கோலிக்காகவது அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை ஆசைப்படுகிறார்கள்.

இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள கெவின் பீட்டர்சன் “கோலி உண்மையிலேயே கோப்பை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவர் வேறு அணிக்கு சென்று விளையாட வேண்டும். அவர் கோப்பையை வெல்ல உதவும் அணியில் விளையாடவேண்டும். அது டெல்லி அணிதான் என்று நான் கருதுகிறேன். கோலியும் டெல்லியை சேர்ந்தவர்தான். ஏன் அவர் சொந்த ஊர் அணிக்கு திரும்ப கூடாது. கோலியைப் போலவே டெல்லி அணியும் கோப்பைக்காக காத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!