Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை!

Advertiesment
ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும் இந்த போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பதால் மிகவும் சோர்வடைவதாகவும், இதனால் மற்ற இந்திய ஆட்டங்களில் சிறப்பாக ஆட முடியாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ”ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விடவும் இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம். இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளால் சோர்வுற்று விடுவதாக கருதினால் ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும்போது ஓய்வா ? – ஆஸ்திரேலிய வீரர் அதிர்ச்சி முடிவு !