Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியும் ரோஹித்தும் ஒருபோதும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது… கபில்தேவ் அதிரடி கருத்து!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:45 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தடாலடியான கருத்துகளை சொல்வதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. இந்த முறை உலகக் கோப்பை தொடர் பற்றி அவர் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நீங்கள் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்களை விட்டு அணிக்காக முடிவுகள் எடுக்க வேண்டும், மேலும் அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு குழு இருக்கிறதா? கண்டிப்பாக. நம்மிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “உங்கள் அணியின் தூண்களாக மாறும் இரண்டு வீரர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அணி அவர்களைச் சுற்றி சுழல்கிறது, ஆனால் நாம் அதை குறைந்தது 5-6 வீரர்களை உருவாக்க வேண்டும். அதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் விராட் மற்றும் ரோஹித்தை சார்ந்திருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்கவில்லை… கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பதில்!

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்… கேப்டன் SKY!

இந்தியா vs பாகிஸ்தான்: போட்டி முடிந்ததும் கைகுலுக்கிக் கொள்ள இரு நாட்டு வீரர்கள்…!

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.. குல்தீப் யாதவ் ஆட்டநாயகன்..!

ஆசிய கோப்பை: இந்தியாவை வெல்வது மட்டும் இலக்கல்ல, கோப்பையையும் வெல்வோம்: பாகிஸ்தான் வீரர்

அடுத்த கட்டுரையில்
Show comments