கோலியும் ரோஹித்தும் ஒருபோதும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது… கபில்தேவ் அதிரடி கருத்து!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:45 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தடாலடியான கருத்துகளை சொல்வதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. இந்த முறை உலகக் கோப்பை தொடர் பற்றி அவர் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நீங்கள் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்களை விட்டு அணிக்காக முடிவுகள் எடுக்க வேண்டும், மேலும் அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு குழு இருக்கிறதா? கண்டிப்பாக. நம்மிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “உங்கள் அணியின் தூண்களாக மாறும் இரண்டு வீரர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அணி அவர்களைச் சுற்றி சுழல்கிறது, ஆனால் நாம் அதை குறைந்தது 5-6 வீரர்களை உருவாக்க வேண்டும். அதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் விராட் மற்றும் ரோஹித்தை சார்ந்திருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன் வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments