Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கபில்தேவ் அண்ட் கோ தேர்வு செய்தது யாரை?

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (13:27 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற தகவலை கபில்தேவ் தலைமையிலான குழு இன்று மாலை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 
 
விண்ணப்பங்களின் கால அவகாசம் முடிந்து இன்று தலைமை பயிற்சியாளர் தேர்வு நடைபெறுகிறது. தேர்வாகியுள்ள டாம் மூடி, மைக் எஸ்ன், கேரி கிர்ஸ்டன், ஜெயவர்த்தனே, ராபின் சிங் லால்சந்த ராஜ்புத் ஆகியோரிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை 7 மணிக்கு கபில்தேவ் தலைமையிலான குழு புதிய பயிற்சியாளர் யார் என்பதை அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments