Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை… பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:39 IST)
பஞ்சாப் அணி நேற்றைய தோல்வியை அடுத்து ப்ளே ஆப்க்கு செல்வதற்கான தகுதியை முற்றிலும் இழந்துவிட்டது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் ‘ பந்துவீச்சாளர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினர். ஆனால் போதுமான ரன்கள் இல்லை. அடுத்த 3 போட்டிகளும் சுவாரஸ்யமானது. நாங்கள் முடிவுகளைப் பற்றி கவலைப்படவில்லை, ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவதுதான் பிடித்திருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments