Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை நான் ஊடகங்களிடம் சொல்லக் கூடாது… பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாலியாகப் பேசிய கே எல் ராகுல்!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (08:06 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி(நாளை) தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராகவே விளையாட வேண்டும் என்றும் ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆடவேண்டும் எனவும் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கே எல் ராகுலிடம் பத்திரிக்கையாளர்கள் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பினர். அதற்கு கே எல் ராகுல் “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் என்ன என்பது குறித்து எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. ஆனால் அதை ஊடகங்களிடம் சொல்லக் கூடாது என்றும் என்னிடம் கூறியுள்ளனர். அதனால் நான் அதை உங்களிடம் சொல்லக் கூடாது” எனப் பேசி பத்திரிக்கையாளர்களை சிரிக்க வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments