Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு… இந்திய அணியில் முக்கிய மாற்றம்!

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு… இந்திய அணியில் முக்கிய மாற்றம்!
, புதன், 1 மார்ச் 2023 (09:49 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சற்று முன்னர் இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பேட் செய்ய முடிவெடுக்க, இந்திய அணி களமிறங்கிய ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் உட்காரவைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்திய அணி களமிறங்கிய தற்போது வரை 14 ரன்கள் சேர்த்து விக்கெட் இழக்காமல் விளையாடி வருகிறது. அதுபோல ஆஸி. அணியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தூர் டெஸ்ட்… இந்திய மண்ணில் கோலி படைக்க உள்ள சாதனை!