Publish Date: Fri, 15 Nov 2024 (15:24 IST)
Updated Date: Fri, 15 Nov 2024 (15:28 IST)
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடிவந்தாலும், போதுமான அனுபவம் இருந்தும் தேவையான நேரத்தில் கே எல் ராகுலிடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைப்பதில்லை. அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேதான் நியுசிலாந்து அணிக்கு எதிரான இன்னிங்ஸிலும் நடந்தது.
நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடி அவுட்டான போது கே எல் ராகுல் களத்தில் இருந்தார். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் வழக்கம்போல சொதப்பி மீண்டும் ஒருமுறை தான் ஒரு “choker” என்பதை நிரூபித்தார்.
இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை வாழ்வா சாவா நிலையில் உள்ளது. அவர் முன்னர் இப்போது இருக்கும் கடைசி வாய்ப்பு பார்டர் கவாஸ்கர் தொடர்தான். அதன் முதல் போட்டியில் ரோஹித் விளையாடாத பட்சத்தில், தொடக்க ஆட்டக்காரராக ராகுல் களமிறங்குவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்துள்ளார். பந்தைத் தடுத்தாட முயன்ற போது, வலது முழங்கையில் காயமேற்பட்டு உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.