Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

Advertiesment
டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

vinoth

, செவ்வாய், 11 மார்ச் 2025 (16:31 IST)
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுடியில் நடைபெற்றது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர்  லக்னோ அணியிலிருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டார். இது அதிர்ச்சியான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதனால் அவரை அந்த அணியின் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுல் கேப்டன் பதவியை ஏற்க மறுத்த விட்டதாக சொல்லப்படுகிறது.

அணியில் ஒரு வீரராக மட்டுமே தொடர விரும்புவதாக கே எல் ராகுல் தெரிவித்ததாகவும், அதனால் அக்ஸர் படேல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை 18 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!