Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கேப்டன கூப்டு திட்டிட்டு இருக்காரு லக்னோ அணி உரிமையாளர்… இணையத்தில் கிளம்பிய சர்ச்சை!

vinoth
வியாழன், 9 மே 2024 (09:54 IST)
ப்ளே ஆஃப் கனவில் சம வாய்ப்பில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிய 57 ஆவது லீக் போட்டி நேற்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ஆமை வேகத்தில் விளையாடி பொறுமையை சோதித்தனர். அதனால் இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த எளிய இலக்கை ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் யாரும் நம்பமுடியாத வகையில் 9.4 ஓவர்களில் எட்டி ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் அந்த அணியின் அபிஷேக் ஷர்மா28 பந்துகளில் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும் சேர்த்தனர். அவர்களின் இந்த அதிரடி இன்னிங்ஸ் ஹைலைட்ஸ் பார்ப்பது போல இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் கோயங்கா ராகுலிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சியில் வெளியாகி இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் கோயங்கா ராகுலையும் அணி வீரர்களையும் கோபமாகத் திட்டி பேசுவது போல அவரது உடல்மொழி இருந்தது. அவரிடம் பதிலுக்கு எதுவும் பேசாமல் கே எல் ராகுல் அவர் சொல்வதை பணிவோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments