Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டோனி ரசிகரை கலாய்த்த முன்னாள் இலங்கை கேப்டன்

டோனி ரசிகரை கலாய்த்த முன்னாள் இலங்கை கேப்டன்
, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:54 IST)
டோனி உலகின் அதிகவேக மனிதன் என கருதப்படும் உசைன் போல்ட் என்பவரை விட வேகமானவர் என்ற கருத்தை பதிவிட்ட ரசிகரை இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கேலி செய்துள்ளார்.


 

 
உலகின் வேகமான மனிதர் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் கடைசியாக கலந்துக்கொண்ட ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் கேப்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் உசைன் போல்ட்டை எண்ணி பெருமைப்பட்டு கருத்து ஒன்றை பதிவிட்டார்.
 
அதற்கு பதில் அளிக்கும் விதமாக டோனி ரசிகர் ஒருவர், டோனி போல்ட்டை விட வேகமானவர் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஜெயவர்தனே கிண்டலாக, தோனி அவரது பைக்கில் இருந்தாரா? என்று பதில் டுவீட் செய்தார்.
 
உசைன் போல்ட்டை டோனியுடன் ஒப்பிடுவது மிக தவறான ஒன்று. அதுவும் டோனி ரசிகர் உசைன் போல்ட்டை விட டோனிதான் சிறந்தவர் என குறிப்பிடுவது மிகவும் தவறான பார்வை என்று குறிப்பிடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியை சீண்டிய ஜெயவர்தனா: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!!