Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

Advertiesment
ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

vinoth

, திங்கள், 2 டிசம்பர் 2024 (07:44 IST)
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம்.

இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அவர் நேற்று அவர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற இளம் நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!