Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிய இங்கிலாந்து!

மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிய இங்கிலாந்து!
, வியாழன், 6 ஜூலை 2023 (08:03 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் எப்படியாவது மூன்றாவது போட்டியை வென்று தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஆஷஸ் போட்டி ஹெட்டிங்லியில் நடக்க உள்ளது. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான ப்ளேயிங் லெவன் அணியை நேற்றே அறிவித்தது இங்கிலாந்து. அதில் அந்த அணியின் மூத்த பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமளிக்கப்படவில்லை. மற்றொரு வீரரான ஜோஷ் டங்கும் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமாக 77 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் மூன்று விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். அதனால் அவருக்கு இந்த டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி.. என்ன ஆச்சு திருச்சி அணிக்கு?