Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது தொடக்கம் தான்… முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதுபெற்ற ஜெய்ஸ்வால் கருத்து!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (07:30 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாளில் முடித்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் 171 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய அவர் “முன் தயாரிப்பு நன்றாக இருந்தது. நாங்கள் ஒரு நல்ல செஸ்ஸனை கொண்டிருந்தோம். ராகுல் டிராவிட்டிடம் நிறைய பேசினேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து தேர்வாளர்களுக்கும், ரோஹித் பாய்க்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் இதற்காக உழைத்து வருகிறேன். நான் நன்றாகத் திட்டமிடுவதிலும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் உணர்ச்சிபூர்வமானது. இது ஒரு ஆரம்பம்தான், நான் எனது கவனத்தை செலுத்தி எனது கிரிக்கெட்டில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்

எனது பயணத்தில் நிறைய பேர் எனக்கு உதவினார்கள், அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மூத்த வீரர்களின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர்களிடம் இருந்து மேலும் கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments