Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ ஒப்பந்த அணியில் இணையும் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே! – சம்பளம் இவ்வளவு கோடிகளா?

Prasanth Karthick
செவ்வாய், 16 ஜனவரி 2024 (15:54 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரும் பிசிசிஐயின் ஒப்பந்த அணியில் சேர்க்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.



இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் இளம் கிரிக்கெட் வீரர்களான ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இரண்டாவது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் 68 ரன்களும், ஷிவம் துபே 63 ரன்களும் குவித்தனர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே இருவரையும் பிசிசிஐ தனது மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. பிசிசிஐயின் மத்திய பிரிவில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ.7 கோடியாகும். ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments