Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸும் ப்ளே ஆஃப்புக்கு போகல: ப்ரீத்தி ஜிந்தாவின் அற்ப மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று புனேவில் நடந்த கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
பஞசாப் அணி ப்ளே ஆஃப் வாய்ப்ப்பு பறிபோனது. தற்போது, முதல் நான்கு இடத்தை பிடித்துள்ள ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
 
இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவின் பேச்சு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பஞ்சாப் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணி தோல்வியுற்றதை நினைத்து வருத்தப்படாமல், மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சியாக உள்ளது என தனது நண்பரிடம் ஆங்கிலத்தில் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பான ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 
 
ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த அற்ப மகிழ்ச்சியை பலர் விமர்சித்து வருகின்றனர். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மற்றவனுக்கு இரண்டு கண்ணும் போகனும் என்பது போல உள்ளது ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த அற்ப மகிழ்ச்சி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments