Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவை அவசர அவசரமாக NCA-க்கு அனுப்பிய பிசிசிஐ!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (07:41 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 28 ரன்களில் தோற்று அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் விசாகப்பட்டணத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு அவருக்கு பதில் சௌரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து எப்படியாவது அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வைக்க வேண்டுமென்று பிசிசிஐ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments