Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் சுகமே… ஜடேஜா போட்ட பதிவு… குஷியான சி எஸ் கே ரசிகர்கள்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (08:23 IST)
சென்னை அணியில் மீண்டும் இணைந்தது குறித்து ஜடேஜா எல்லாம் சுகமே என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் சில போட்டிகளில் கேப்டனாக ஜடேஜா பணிபுரிந்தார் என்பதும் அவரது கேப்டன்ஷிப் திருப்தி இல்லாததால் மீண்டும் தோனி கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் ஜடேஜா, அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜடேஜா சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதற்கு தோனியின் அழுத்தம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தக்கவைக்க பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பின்னர் ஜடேஜா “எல்லாம் சுகமே” என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது சி எஸ் கே ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

அடுத்த கட்டுரையில்
Show comments