Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

vinoth
திங்கள், 28 ஜூலை 2025 (07:54 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ‘டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு’ நடந்து சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 358 ரன்கள் சேர்க்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் சேர்த்தது.

311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் இரண்டு விக்கெட்களையும் அடுத்தடுத்து இழந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அதன் பின்னர் கே எல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்தனர். இருவரும் முறையே 90 மற்றும் 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து வந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் மிகச்சிறப்பாக ஆட்டத்தை எடுத்து சென்றனர். அவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் முறையே 107 மற்றும் 101 ரன்கள் சேர்க்க இந்திய அணி 425 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என இரு அணிகளும் அறிவித்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயக தலைவர் பட்டியல்.. மோடி தொடர்ந்து முதலிடம்?

இந்திய அணியில் மூன்று சதங்கள்.. போட்டியை டிரா ஆக்கிய மூவரணி.. ஸ்கோர் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments