Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் திடீர் விலகல்! என்ன காரணம்?

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:16 IST)
இன்று நடைபெறும் ஆஸ்திரேலியா – இந்தியா மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து முக்கிய இந்திய வீரர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. எனினும் இன்றைய போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனான இஷான் கிஷன் இந்த போட்டியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த போட்டியில் விளையாடவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே விளையாடி வருவதால் இஷான் கிஷன் இல்லாவிட்டாலும் மிடில் ஆர்டரில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்திய அணி சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments