Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறாரா விராட் கோலி? - அவரே கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick
ஞாயிறு, 16 மார்ச் 2025 (11:28 IST)

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதுகுறித்து அவரே பேசியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இந்தியா தாண்டியும் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள விராட் கோலி சமீபமாக சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடந்து முடிந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். இதனால் அவர் விரைவில் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து ஆர்சிபி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்க போவதில்லை. போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் இருக்கும் வரை ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் நேசிக்கிறேன். முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அனுபவித்து விளையாடி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

 

 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments