Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீரை ஹீரோவாக முன்னிறுத்துகிறதா பிசிசிஐ?... அடுத்தடுத்து வெளியாகும் பதிவுகள்!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (11:36 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அணியில் கம்பீர் சில முடிவுகளை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே பிசிசிஐ, கவுதம் கம்பீரையே முன்னிறுத்தும் விதமாக பதிவுகளாக வெளியிடுகிறது. கம்பீர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பயிற்சியை மேற்பார்வையிடுவது ஆகியவற்றை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் கம்பீரை போஸ்டர் பாயாக பிசிசிஐ பயன்படுத்துவதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments