ஐ.பி.எல். போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடுவாரா..? பிசிசிஐ முக்கிய தகவல்..!!

Senthil Velan
செவ்வாய், 12 மார்ச் 2024 (14:47 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து உருகுலைந்தது. தலை, முதுகு, காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், ரிஷப் பந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணமடைந்து,  மீண்டும் கிரிக்கெட் விளையாட உடற்தகுதி பெறுவதற்காக கடந்த ஓராண்டாக பிசிசிஐ கண்காணிப்பில் பயிற்சி பெற்று வருகிறார்.
 
இந்த மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பந்த் உடற்தகுதி பெற்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ALSO READ: முத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் விழா கோலாகலம்..!
 
இருப்பினும், முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே ரிஷப் பந்த் களமிறங்குவார் என்றும், அவரின் உடல் நிலை பொறுத்து கீப்பிங் செய்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments