Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதா?... கர்நாடக கிரிக்கெட் சங்கம் கொடுத்த பதில்!

vinoth
சனி, 16 மார்ச் 2024 (07:59 IST)
ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இத்தனைக்கும் இந்த அணி இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களின் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும்.

ஆனால் இம்முறை அவர்களுக்கு அந்த ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது போலிருக்காது. ஏனென்றால் இந்த ஆண்டு பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிகளை அங்கு வைத்தால் அதிகளவில் தண்ணீர் பயன்பாடு இருக்கும் என்பதால், இப்போது ஆர்சிபி அணியின் போட்டிகளை வேறு ஏதேனும் ஒரு மைதானத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இந்த தகவலை கர்நாடக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. தண்ணீர் பிரச்சனையால் ஐபிஎல் போட்டிகள் பாதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இது பெங்களூர் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments